Pages

Thursday 9 May 2013

காப்பாற்ற வருவாய்

காதலா !..உன்னை நான் எப்படி
காணாமல் இருப்பேன்?..
இருதயம் இல்லாத கூட்டத்தின்
இரும்பு பிடியில் நான் ...
பாசம் இருப்பதுபோல்
பாசாங்கு செய்கிறார்கள் ...
பார்க்க கூடாதாம் உன்னை
பார்வை பிறகு எனக்கு எதற்கு ?..
விரல் பதிந்த கைப்பேசி அழுகிறது -என்
விரல்கள் வலுவிழந்ததை கண்டு ...
உறக்கமின்றி நான் தவிப்பது ..
உனக்குமட்டும் தெரியாதா என்ன ?...
காப்பாற்ற வருவாய் நீ ..
காதலை வாழ வைப்பாய்நீ ..
காலமெல்லாம் நம்பிக்கையில் ..
காத்திருக்கும் காதலி .....

பேய் என ஆன தாய்

தாயே!நீ ஏன் இப்படி
பேய் என ஆனாய் ?..
தரக்குறைவான வார்த்தைகள் பேசி ..
தரம் குறைந்து நிற்கிறாய் ...
உன்மீது நான் வைத்த நம்பிக்கை
உடைந்து தான் போய்விட்டது ....
காதல் செய்வது என்ன பெரும் பாவமோ ?..
காட்டு மிரண்டியாய் நடந்து கொள்கிறாய் ..
பாசத்தால் நிறைந்த என் மனம் --இன்று
பாரமாகி போனதே தாங்கமுடியவில்லை ..
எதிர் பார்க்கவில்லை தாயே !---நீ
எதிரி போல் என்னை பார்ப்பாய் என்று ..
இரட்டை வேடம் போடும் உன்னை
இப்பவும் மன்னிக்கிறேன் நீ தாய் என்பதால் ..
உண்மையை பேசு --தயவு செய்து
உன் உள்ளத்திலிருந்து பேசு .....



Wednesday 1 May 2013

மகளே !என் அருமை மகளே!


மகளே !என் அருமை மகளே!
மலடி என ஒருவரும் அழைக்காவண்ணம் 
மகளாய் பிறந்தவளே!...
மகிழ்கின்றேன் உன்னில் ...
ஒரு மணி நேர வேதனையை 
ஒரு வினாடியில் மறந்தேன் ...
என்னுள் குடியிருந்த உயிரே ..
என்னை கட்டிக்கொண்டு 
என் கன்னத்தில் நீ இட்ட முத்தம் 
என்றுமே இனிக்குமே திகட்டாது ...
உன் மழலையில் மகிழ்ந்தேன் 
உன் அறிவில் வியந்தேன் 
உன் அன்பில் நனைந்தேன் 
உன் சாதனையில் பெருமிதமடைந்தேன் 
ஒரு சில வரிகளில் முடிந்திடுமோ?
ஒரு தாயின் பாசம் ..
ஒரு யுகம் கடந்து போனாலும் 
ஒரு அற்புதமாய் என்றும் நிற்கும் .

நமக்குள் பிரிவு

நமக்குள் பிரிவினை ஏன் தெரியவில்லை 

பாசம் அன்பு மாறியதேன் புரியவில்லை 
உன் அன்பு கிடைக்க நான் கொடுத்துவைக்கவில்லை 
விலகி நீ  போனாலும் உன்னை என்றும் 
விரும்பியே இருப்பேன் அன்பே ..

வலி தீர வழி சொல்


உதட்டளவில்தான் உறவு வைத்தாய் 
உள்ளத்திலிருந்து ஏனோ விலக்கிவைத்தாய் 
உணர்ந்து கொண்ட போதோ !..
உயி ர் அறுந்து வீழ்ந்தேன் ..
பார்க்காதபோது பரிவுடன் இருந்தாய் ..
பார்த்தபின் ஏனோ பரிதவிக்கவிட்டாய் 
பார்த்து எதிர்பார்த்து பாதியானது தேகம் 
பாராமுகமாய் நீ இருப்பதால் 
வலிக்கிறதே என் நெஞ்சம் ..அந்த 
வலிதீர வழி ஒன்றை சொல் ...

Tuesday 2 April 2013

ஹைக்கூ

இரைச்சல்

ரயில் ஓடும் தண்டவாளமாய் -உன்
நினைவுகள் ஓடும் மனதில் ..
ஒரே இரைச்சல் ...

காதல் பூ

உன் அன்பெனும் மழைச்சாரலால் ..
பூத்ததோ என் மனதில்
காதல் பூ ...

காதல் வாசம்

சந்தனகட்டையே உரசினாய் நீயும்
இந்த கல்மீது ...மணக்கின்றேன் நானும்
சந்தனமாய் .....


காதல்


காணவில்லை

நெருங்கினாய் பார்வையால்
நிரப்பினாய் வார்த்தையால்
கொன்றாய் அன்பால்
புதைத்தாய் உன் உள்ளத்தில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
காணவில்லையே என்னை ....


காதல் நாடகம்

நில்லாமல் நின்றாய்
பார்க்காமல் பார்த்தாய்
சொல்லாமல் சொன்னாய்
கொல்லாமல் கொன்றாய்
செல்லாமல் செல்கிறாய் -இதுதான்
காதல் நாடகமா?..

வீண்


மனநிறைவில்லா வாழ்க்கை
ஞானமில்லா பலம்
கடைபிடிக்காத ஒழுக்கம்
உழைக்காத உணவு
கைமாறு எதிர்பார்த்த உதவி
அடக்கமில்லா படிப்பு
ரசிக்கப்படாத அழகு
காட்டப்படாத அன்பு
பேசப்படாத நல்வார்த்தை
தொடர்பு இல்லாத நட்பு - இவை
எல்லாமே வீண் ...

Tuesday 26 March 2013

காதலி என்னை காதலி


வானம் என் கைக்கு எட்டும்
தூரம் வந்து விடும் ..
வெற்றியோ என் வாசலில்
காத்துகிடக்கும் ..
உலகமே என் காலடியில்
வீழ்ந்து கிடக்கும் ..
ஏணியே இல்லாமல் உயரம்
எனக்கு எட்டிவிடும் ..
ஐயோ !..நீ மட்டும் என் காதலை
ஏற்று கொண்டுவிட்டால் ....


காயவடு மறைய வில்லையே ...


தண்ணீரில் ஓடம் போகும் -என்

கண்ணீரில் ஓடம் போகுமோ ?..
காட்டாற்று வெள்ளத்தில் எல்லாம்
காணாமல் போகும் ..
காதல் பெருவெள்ளத்தில் -நான்
காணாமல் போனேனே ...
காதலை மட்டுமே நான் தந்தேன்
காயங்கள் மட்டுமே நீ தந்தாய் ...
காய்ந்து போனாலும் என்
காயவடு மறையவில்லையே ...

புரிகிறதா கொஞ்சம்


உன்னிடம் மயங்குகிறேன் 
உண்மையைத்தான் சொல்லுகிறேன் 
உயிரற்ற உடம்பாய் இருந்தேன் 
உயிரை ஊற்றினாய் என்னுள் ..
உரிமையாக்கிக்கொள்ள துடிக்கும் நெஞ்சம் 
உனக்கு அது புரிகிறதா கொஞ்சம் .



Monday 18 March 2013

காத்திடு என் இறைவா !..


ஏக்கமும் ஏமாற்றமும் 
போதுமே ..என் இறைவா ...
என்னுள் செத்துவிட நான் விரும்பவில்லை 
சுவாசத்தை கொடுத்துவிடு என் இறைவா ..
அவளுக்குள் மூழ்கிட நான் விரும்பவில்லை 
மேலே தூக்கிவிடு என் இறைவா ...
நான் பிழைத்தால் உன்னால் தான் என் இறைவா ..
இனி ஒரு முறை ஏமாறாமல் காத்திடு என் இறைவா ...

எப்படி உரைப்பேன் என் அன்பை ?...


ஒரு நிமிடம் நீ பேசினால் ..
பறப்பேன் வானில் ..
இது ஏன் உனக்கு தெரியவில்லை ?..
என் இதயமொழி உனக்கு புரிகிறதா ?..
புரிந்துகொண்டு தான் நடிக்கிறாயா ?..
கனவில் வருவாய் என ..
தூக்கம் விழிக்காமல் காத்திருக்கிறேன் .
கனத்த மனதிற்கு ஆறுதல் 
உன் வார்த்தையில் ...
மனதோடு பேச வா அன்பே ...
வேறு எப்படித்தான் உரைப்பேன் 
என் அன்பை ...

ஏன் உணரமுடியவில்லை ?


என்ன நான் இன்னும் 
ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமோ ?..
உன்னுடன் பேச ...
உன்னை நான் அப்படியே ..
மறந்துவிட முடியாதே !...
உன் கண்ணசைவு எனக்கு புரிகிறது 
என் இதய துடிப்பை உன்னால் 
ஏன் உணரமுடியவில்லை ?....

ஹைக்கூ ...

தவிப்பு 

தூண்டில் போட்டாய் 
அன்பெனும் புழுவால் .....
சுவாசம் இன்றி தவிக்கின்றேன் 
தரையில் மீனாய் ......


தெய்வம் 

தேவதையே ....
நீயே !..என் தெய்வம் ...ஆம் ..
தெய்வம் பேசுவதில்லை 
உன்னைப்போல் ....


காதல் 

வினாக்கள் நிறைய எழும் ..
ஆனால் 
விடைதான் கிடைக்காது ...

Saturday 9 March 2013

காப்பாற்றும் எண்ணம் இல்லையோ ?..

தூக்கம் இல்லை கண்ணே ..

உன் நினைவால் ..
தவறியே தூங்கினாலும்
கனவிலும் நீயே ...
உன்னால் கண்ணீரில்
கரைகின்றேன் ....
காப்பாற்றும் எண்ணம் இல்லையோ ?...

நிஜத்தை காண்பது எப்போது?...

நிஜத்தில் உன்னோடு
வாழ்ந்த போது ...
நிழலாய் என்னோடு இருப்பேன்
என்றாய் .....
உன் நிழலோடு மட்டுமே
வாழ்கின்றேன் இப்போது ..
உன் நிஜத்தை காண்பது எப்போது ?...



எவர்க்கும் கொடுத்துவிடாதே


மறக்கத்தான் நினைக்கிறேன்
உன்னை .....
நினைவலைகள் ஒய்வதாய்
இல்லை ......
நீயாக என்னிடம் பேசவும்
மாட்டாய் ...
நான் பேசும்போதும்
தவிர்ப்பாய் ....
உன் இதயத்தில் நான்
இல்லை ...என்று
சொல்லிவிட்டாலும்
பரவாயில்லை ....
சொல்லாமல் கொல்வதே
உன் வழக்கம் .
மனதை கசக்கி பிழியும் ..இந்த
வேதனை யை பெண்ணே ....
வேறு எவர்க்கும் கொடுத்துவிடாதே ....


இளமை

நேற்று பாலகன்
இன்று இளம்காளை
நாளை கிழவன்
இளமை தேயும்
முதுமை வரும்
கருமயிர் நிறம்மாறி
வெண்மையாகும் ....
நமது உயிர் இறப்பை
சந்திக்கும் ....
உடல் கீழே விழும்
அதற்கு முன் ....
உன் கடமைகளை
செய்து விடு ..
உணவை பிறரிடம்
பகிர்ந்து உண்டுவிடு ...
பாவக்கணக்கை
முடித்துவிடு ...
புண்ணியகணக்கை
கூட்டிவிடு .....




Sunday 27 January 2013

செல்வம்


உயிர் போனால்
உன்னோடு எதுவும் வருவது இல்லை ..
காலன் வந்துவிட்டால்
காசு பயன்படுவதில்லை ...
கடல்மேல் செல்லும் கப்பல்
கவிழும் நேரம் உனக்கு தெரிவதில்லை ...
நிலையில்லா வாழ்விது என்றுமே
நிலைக்காது இது உனக்கு புரிவதில்லை ...
செல்வம் மட்டும் நிலைக்கும் என்று
செருக்குடன் இருப்பது ஏன் ?..
நிகரில்லா தர்மம் செய்து
நிரந்திர செல்வம் பெற்று கொள் ...

Saturday 12 January 2013

மரணம்

உடலெனும் கூட்டை விட்டு 


உயிர் பறவை பறந்தது -

மரணம் ...

வான் சிறப்பு



மழையாலே 

மரம் வளரும் ...

மரத்தாலே 

மழை பெய்யும் ...

தரிசனம்


அன்பாலே உருகி

அகம் குளிர்ந்தால் கிடைக்குமே

அவன் [கடவுள்]தரிசனம் .

ஆனந்தம்



நீ தூக்கி வந்த சுமையை 
இறக்காமல் விடாது 
உன் ஆன்மா ....
நீ செய்த வினைகளின் 
பலனை புசிக்காமல் விடாது 
உன் உடல் ...
இன்பம் வரும் போது 
இறுமாப்பு கொள்கிறாய் ...
துன்பம் வரும் போது 
துவண்டு போகிறாய் ...
நீ இருட்டில் பாதை தேடி 
தவிக்கும் போது ...
ஒளியாய் வழி காட்டுபவன் 
இறைவன் .....
அவனை மனதில் இருத்தி 
அமைதியாய் வாழ 
முயற்சி செய் .....
ஆனந்தம் தேடிவரும் 
உன்னை ......

Tuesday 1 January 2013

புத்தாண்டே வந்துவிடு

புத்தாண்டே வந்துவிடு

புத்துயிர் பெற்றுவிடு

துயரங்களை துடைத்துவிடு

இன்பங்களை தந்துவிடு

அன்பு எங்கும் பரவ செய்துவிடு

பெண்மையை மதிக்கும் பண்பை வளர்த்திடு

குற்றமற்றவர்கள் வாழும் நாடாக மாற்றிவிடு

அனைத்து வளமும் பெற்றதாய் இந்தியாவை ஆக்கிவிடு