Pages

Tuesday 18 December 2012

அன்பான அத்தைக்கு கண்ணீர் அஞ்சலி


அத்தை மடி மெத்தையடி 
ஆடிவிளையாடம்மா ...---என்று 
எனக்கு தாலாட்டு பாடிய 
என் அத்தையே .....
இன்று உன் மீளா தூக்கத்திற்கு 
தாலாட்டு பாடியது யார் ?..
என் அன்னைமடி போதும் என 
பாட்டி யிடம் சென்றுவிட்டாயோ ?..
போதும் பட்ட அவஸ்த்தை என்று 
போகத்துணி ந்தாயோ ?...
எவ்வளவு தான் தத்துவம் பேசினாலும் 
என்மனம் தாங்க முடியாமல் தவிக்குதே !..
அன்பின் இந்த வலிமை யாருக்கு புரியும் ?..
மனதின் பாரத்தை இரக்க த்தெரியாமல் தவிக்கிறேன் 
இறைவனிடம் ஆறுதல் தேடுகின்றேன் ...
மரணம் என்ற ஒன்று 
மறுக்கமுடியாத து என்று 
உணர்கின்றேன் ...
அதனால் ...
இறைவனின் திருவடி நிழலில் ---உங்கள் 
ஆன்மா சாந்தியும் சமாதானமும் பெற 
பிராத்திக்கிறேன் .....

Saturday 15 December 2012

வாழும் என் உயிர்

மலையளவுகனம் சுமப்பது 
என்மனம்தானோ ?..
விழி மூட மறுப்பது 
உன்நினைவில் தானோ ?..
மனம்நிழலாய் தொடர்வது 
உன்னால் தானோ ?...
காதல் என்றால் வலி தானோ ?.--மனம் 
உன் கால் தடம் படிந்த மணல் தானோ ?..
நீ வந்தால் ,வாழ வைத்தால் 
வாழும் என் உயிர் தானோ ?..

போதை

மது வாடை அறியாதவன் 

தள்ளாடுகிறேன் ....

உன் நினைவால் ...

Wednesday 12 December 2012

மீண்டும் வாழ்வோம் வா .

கடற்கரையில் நாம் பதித்த 

கால் தடம் மீது நடப்போமா ?..
மீண்டும் ...
நாம் சந்தித்த இடங்களில் 
சந்திப்போமா ?..
மீண்டும் ..
நாம் வாழ்ந்த வாழ்க்கையை 
வாழ்வோமா ?..
மீண்டும் ..
காற்றாய் நீ மாறிய பின்னும் 
கைகோர்க்க நினைக்குது நெஞ்சம் 
மீண்டும் வாழ்வோம் வா .....

Saturday 8 December 2012

பறவை


சிறகில்லாமல் பறந்தேன் 
நானும் ...
உன்மனவானில் ...

தலைகீழ்


வௌவாலாய் மனம் 
உன்னை ப்பிடித்து தொங்க ...
என் உலகமே தலை கீழ் .

நினைவு


மனதைத் தொட்டு போனாய் 
அலைகளாய் ....
நினைவை விட்டுச் சென்றாய் 
நுரைகளாய் ....

தரிசனம்


அழகே !அழகே !
அழுது வேண்டுகிறேன் ..
கிடைக்குமா உன் தரிசனம் ?..