உயிர் போனால்
உன்னோடு எதுவும் வருவது இல்லை ..
காலன் வந்துவிட்டால்
காசு பயன்படுவதில்லை ...
கடல்மேல் செல்லும் கப்பல்
கவிழும் நேரம் உனக்கு தெரிவதில்லை ...
நிலையில்லா வாழ்விது என்றுமே
நிலைக்காது இது உனக்கு புரிவதில்லை ...
செல்வம் மட்டும் நிலைக்கும் என்று
செருக்குடன் இருப்பது ஏன் ?..
நிகரில்லா தர்மம் செய்து
நிரந்திர செல்வம் பெற்று கொள் ...