Pages

Tuesday, 18 December 2012

அன்பான அத்தைக்கு கண்ணீர் அஞ்சலி


அத்தை மடி மெத்தையடி 
ஆடிவிளையாடம்மா ...---என்று 
எனக்கு தாலாட்டு பாடிய 
என் அத்தையே .....
இன்று உன் மீளா தூக்கத்திற்கு 
தாலாட்டு பாடியது யார் ?..
என் அன்னைமடி போதும் என 
பாட்டி யிடம் சென்றுவிட்டாயோ ?..
போதும் பட்ட அவஸ்த்தை என்று 
போகத்துணி ந்தாயோ ?...
எவ்வளவு தான் தத்துவம் பேசினாலும் 
என்மனம் தாங்க முடியாமல் தவிக்குதே !..
அன்பின் இந்த வலிமை யாருக்கு புரியும் ?..
மனதின் பாரத்தை இரக்க த்தெரியாமல் தவிக்கிறேன் 
இறைவனிடம் ஆறுதல் தேடுகின்றேன் ...
மரணம் என்ற ஒன்று 
மறுக்கமுடியாத து என்று 
உணர்கின்றேன் ...
அதனால் ...
இறைவனின் திருவடி நிழலில் ---உங்கள் 
ஆன்மா சாந்தியும் சமாதானமும் பெற 
பிராத்திக்கிறேன் .....

No comments:

Post a Comment