Pages

Tuesday 26 March 2013

காதலி என்னை காதலி


வானம் என் கைக்கு எட்டும்
தூரம் வந்து விடும் ..
வெற்றியோ என் வாசலில்
காத்துகிடக்கும் ..
உலகமே என் காலடியில்
வீழ்ந்து கிடக்கும் ..
ஏணியே இல்லாமல் உயரம்
எனக்கு எட்டிவிடும் ..
ஐயோ !..நீ மட்டும் என் காதலை
ஏற்று கொண்டுவிட்டால் ....


காயவடு மறைய வில்லையே ...


தண்ணீரில் ஓடம் போகும் -என்

கண்ணீரில் ஓடம் போகுமோ ?..
காட்டாற்று வெள்ளத்தில் எல்லாம்
காணாமல் போகும் ..
காதல் பெருவெள்ளத்தில் -நான்
காணாமல் போனேனே ...
காதலை மட்டுமே நான் தந்தேன்
காயங்கள் மட்டுமே நீ தந்தாய் ...
காய்ந்து போனாலும் என்
காயவடு மறையவில்லையே ...

புரிகிறதா கொஞ்சம்


உன்னிடம் மயங்குகிறேன் 
உண்மையைத்தான் சொல்லுகிறேன் 
உயிரற்ற உடம்பாய் இருந்தேன் 
உயிரை ஊற்றினாய் என்னுள் ..
உரிமையாக்கிக்கொள்ள துடிக்கும் நெஞ்சம் 
உனக்கு அது புரிகிறதா கொஞ்சம் .



Monday 18 March 2013

காத்திடு என் இறைவா !..


ஏக்கமும் ஏமாற்றமும் 
போதுமே ..என் இறைவா ...
என்னுள் செத்துவிட நான் விரும்பவில்லை 
சுவாசத்தை கொடுத்துவிடு என் இறைவா ..
அவளுக்குள் மூழ்கிட நான் விரும்பவில்லை 
மேலே தூக்கிவிடு என் இறைவா ...
நான் பிழைத்தால் உன்னால் தான் என் இறைவா ..
இனி ஒரு முறை ஏமாறாமல் காத்திடு என் இறைவா ...

எப்படி உரைப்பேன் என் அன்பை ?...


ஒரு நிமிடம் நீ பேசினால் ..
பறப்பேன் வானில் ..
இது ஏன் உனக்கு தெரியவில்லை ?..
என் இதயமொழி உனக்கு புரிகிறதா ?..
புரிந்துகொண்டு தான் நடிக்கிறாயா ?..
கனவில் வருவாய் என ..
தூக்கம் விழிக்காமல் காத்திருக்கிறேன் .
கனத்த மனதிற்கு ஆறுதல் 
உன் வார்த்தையில் ...
மனதோடு பேச வா அன்பே ...
வேறு எப்படித்தான் உரைப்பேன் 
என் அன்பை ...

ஏன் உணரமுடியவில்லை ?


என்ன நான் இன்னும் 
ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமோ ?..
உன்னுடன் பேச ...
உன்னை நான் அப்படியே ..
மறந்துவிட முடியாதே !...
உன் கண்ணசைவு எனக்கு புரிகிறது 
என் இதய துடிப்பை உன்னால் 
ஏன் உணரமுடியவில்லை ?....

ஹைக்கூ ...

தவிப்பு 

தூண்டில் போட்டாய் 
அன்பெனும் புழுவால் .....
சுவாசம் இன்றி தவிக்கின்றேன் 
தரையில் மீனாய் ......


தெய்வம் 

தேவதையே ....
நீயே !..என் தெய்வம் ...ஆம் ..
தெய்வம் பேசுவதில்லை 
உன்னைப்போல் ....


காதல் 

வினாக்கள் நிறைய எழும் ..
ஆனால் 
விடைதான் கிடைக்காது ...

Saturday 9 March 2013

காப்பாற்றும் எண்ணம் இல்லையோ ?..

தூக்கம் இல்லை கண்ணே ..

உன் நினைவால் ..
தவறியே தூங்கினாலும்
கனவிலும் நீயே ...
உன்னால் கண்ணீரில்
கரைகின்றேன் ....
காப்பாற்றும் எண்ணம் இல்லையோ ?...

நிஜத்தை காண்பது எப்போது?...

நிஜத்தில் உன்னோடு
வாழ்ந்த போது ...
நிழலாய் என்னோடு இருப்பேன்
என்றாய் .....
உன் நிழலோடு மட்டுமே
வாழ்கின்றேன் இப்போது ..
உன் நிஜத்தை காண்பது எப்போது ?...



எவர்க்கும் கொடுத்துவிடாதே


மறக்கத்தான் நினைக்கிறேன்
உன்னை .....
நினைவலைகள் ஒய்வதாய்
இல்லை ......
நீயாக என்னிடம் பேசவும்
மாட்டாய் ...
நான் பேசும்போதும்
தவிர்ப்பாய் ....
உன் இதயத்தில் நான்
இல்லை ...என்று
சொல்லிவிட்டாலும்
பரவாயில்லை ....
சொல்லாமல் கொல்வதே
உன் வழக்கம் .
மனதை கசக்கி பிழியும் ..இந்த
வேதனை யை பெண்ணே ....
வேறு எவர்க்கும் கொடுத்துவிடாதே ....


இளமை

நேற்று பாலகன்
இன்று இளம்காளை
நாளை கிழவன்
இளமை தேயும்
முதுமை வரும்
கருமயிர் நிறம்மாறி
வெண்மையாகும் ....
நமது உயிர் இறப்பை
சந்திக்கும் ....
உடல் கீழே விழும்
அதற்கு முன் ....
உன் கடமைகளை
செய்து விடு ..
உணவை பிறரிடம்
பகிர்ந்து உண்டுவிடு ...
பாவக்கணக்கை
முடித்துவிடு ...
புண்ணியகணக்கை
கூட்டிவிடு .....