வானம் என் கைக்கு எட்டும்
தூரம் வந்து விடும் ..
வெற்றியோ என் வாசலில்
காத்துகிடக்கும் ..
உலகமே என் காலடியில்
வீழ்ந்து கிடக்கும் ..
ஏணியே இல்லாமல் உயரம்
எனக்கு எட்டிவிடும் ..
ஐயோ !..நீ மட்டும் என் காதலை
ஏற்று கொண்டுவிட்டால் ....
கண்ணீரில் ஓடம் போகுமோ ?..
காட்டாற்று வெள்ளத்தில் எல்லாம்
காணாமல் போகும் ..
காதல் பெருவெள்ளத்தில் -நான்
காணாமல் போனேனே ...
காதலை மட்டுமே நான் தந்தேன்
காயங்கள் மட்டுமே நீ தந்தாய் ...
காய்ந்து போனாலும் என்
காயவடு மறையவில்லையே ...
நிஜத்தில் உன்னோடு
வாழ்ந்த போது ...
நிழலாய் என்னோடு இருப்பேன்
என்றாய் .....
உன் நிழலோடு மட்டுமே
வாழ்கின்றேன் இப்போது ..
உன் நிஜத்தை காண்பது எப்போது ?...
மறக்கத்தான் நினைக்கிறேன்
உன்னை .....
நினைவலைகள் ஒய்வதாய்
இல்லை ......
நீயாக என்னிடம் பேசவும்
மாட்டாய் ...
நான் பேசும்போதும்
தவிர்ப்பாய் ....
உன் இதயத்தில் நான்
இல்லை ...என்று
சொல்லிவிட்டாலும்
பரவாயில்லை ....
சொல்லாமல் கொல்வதே
உன் வழக்கம் .
மனதை கசக்கி பிழியும் ..இந்த
வேதனை யை பெண்ணே ....
வேறு எவர்க்கும் கொடுத்துவிடாதே ....
நேற்று பாலகன்
இன்று இளம்காளை
நாளை கிழவன்
இளமை தேயும்
முதுமை வரும்
கருமயிர் நிறம்மாறி
வெண்மையாகும் ....
நமது உயிர் இறப்பை
சந்திக்கும் ....
உடல் கீழே விழும்
அதற்கு முன் ....
உன் கடமைகளை
செய்து விடு ..
உணவை பிறரிடம்
பகிர்ந்து உண்டுவிடு ...
பாவக்கணக்கை
முடித்துவிடு ...
புண்ணியகணக்கை
கூட்டிவிடு .....