மெய்யே பொய்தான்
மெய்யே ( உடலே ) இங்கு பொய்தான்
மெய்யே ( உண்மையே ) இன்று பொய்தான்
பணத்தை பார்க்கும் மனிதா !
குணத்தை பார்ப்பவன் எங்கே ?
எழில் சிந்தும் அழகும்
அழியப் போவது மெய்தான்
அன்பை மேற்கொள்ளாமல்
பண்பை இழக்கும் மனிதா !
உண்மையைதான் சொல்லுகிறேன்
உணர்ந்ததைத்தான் சொல்லுகிறேன்
சுகபோகத்தை அடைந்தாலும்
சுடுகாடு நமக்கு நிச்சயம்
வழி மாறிய பயணம் தான்
விழி மூடிய தருணம் தான்
பிரித்து வாழும் உலகு ,நீ !
சிரித்து வாழ பழகு .
- Shanthy Balaji