Pages

Monday 5 November 2012

ஆதரவற்ற மகனின் கனவு

தாயே ! ...

எங்கு தான் போனாய் !...
என்னை தனியே
தவிக்க விட்டு ;

தெரிந்தே என்னை
தெருவில் விட்டாயோ ?...

ஏதோ ஒரு கயவனை நம்பி
மோசம் போனாயோ ?...

விருப்பமே இல்லாமல்
என்னை ஈன்றாயோ ?...

தவறி உன் வயிற்றில்
பிறந்தேன் என்று
தண்டனை தந்தாயோ ?...

மண்ணில் நான் விழும் முன்னே - நீ 
விண்ணுலகம் சென்றாயோ ?...

தெரிந்தே என்னை
தவற விட்டாயோ ?...

உனக்கு தெரியாமலேயே
தவற விட பட்டேனோ ?...


நீ இரக்கமுள்ளவளோ , இரக்கமற்றவளோ ;
அது தெரியாத எனக்கு ,
ஒரு பேராசை மட்டும் உண்டு.

என்றோ ,
ஒரு நாள்
உன்னை சந்திப்பேன்
என் மகன் நீயென - நீ
புகழும்படி உயர்வேன்

என் கனவு நனவாகுமா தாயே ?...

- சாந்தி பாலாஜி


No comments:

Post a Comment