Pages

Friday 9 November 2012

மௌன மொழி

நீ ஏன் ?..ஒரு வார்த்தைக் கூ ட

பேசாமல் மௌனத்தால்

என்னை கொல்கிறாய் ?...

காற்றோடு மலர் பேச

வாசமாய் ..........

காற்றோடு கடல் பேச

அலைகளாய் ........

என்னோடு நீ பேச நான்

என்னாவேனோ ?....

சிதைந்த என் மனம் - உன்

சிரிப்பால் , தன் ....

சிறகை விரிக்கும் .......

அது தெரிந்தும் ஏன் ?...

இந்த மௌனம் .....

தேவதையே !..வந்து பேசி விடு !..

எனக்கு ஒரு வாழ்வை தந்து விடு !....

No comments:

Post a Comment