மெய்யே பொய்தான்
மெய்யே ( உடலே ) இங்கு பொய்தான்
மெய்யே ( உண்மையே ) இன்று பொய்தான்
பணத்தை பார்க்கும் மனிதா !
குணத்தை பார்ப்பவன் எங்கே ?
எழில் சிந்தும் அழகும்
அழியப் போவது மெய்தான்
அன்பை மேற்கொள்ளாமல்
பண்பை இழக்கும் மனிதா !
உண்மையைதான் சொல்லுகிறேன்
உணர்ந்ததைத்தான் சொல்லுகிறேன்
சுகபோகத்தை அடைந்தாலும்
சுடுகாடு நமக்கு நிச்சயம்
வழி மாறிய பயணம் தான்
விழி மூடிய தருணம் தான்
பிரித்து வாழும் உலகு ,நீ !
சிரித்து வாழ பழகு .
- Shanthy Balaji
- Shanthy Balaji
”இன்னாது அம்ம இவ்வுலகு,
ReplyDeleteஇனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே”-
எனும் சங்கக் காலக் கவிஞரின் தொடர்ச்சிதான்
உங்கள் உணர்வலைகள். தொடர்ந்து எழுதுங்கள்.
வணக்கம்.
நா.முத்து நிலவன்,
புதுக்கோட்டை -622004.
http://valarumkavithai.blogspot.in/
வணக்கம்.
Deleteஎனக்கு தமிழ் புலமை அதிகம் இல்லை என்றாலும் , தமிழ் ஆர்வம் உண்டு. அதன் விளைவே இந்த மழலை முயற்சி.
தங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுத முயலுவேன்.