தோழியே உனக்காக,
மீண்டும் பூத்த உன் நட்பால்
மலர்ந்தது இந்த கவிதை மடல்...
கல்லூரியின் இறுதிநாள்
புகைப்படத்தில்
நீயும் நானும்-சிரிப்பில்
மனம் கனத்தது
அன்று இரவு
இனி ....
என்று காண்பேன்
உன்னை........
இருபது ஆண்டுகள் தவம்.,
இறைவன் கருணை
இனியவள் உன்
சந்திப்பு......
நான்
உனக்கு நெருக்கமானவள் இல்லை.,
உன் இதயத்திற்கு
நெருக்கமானவள் .
பூ போல மலர்ந்த முகம்
பால் போல மனம்
பிள்ளை போல பழகும் விதம்
கர்வமே இல்லா உன் எளிமை
சொல்லிகொண்டே போவேன்
உன்னை பற்றி......
அன்னாளில்
உன்னை நெருங்க விருப்பம்
ஆனால் மனதில் ஏனோ?
தயக்கம்.....
நீயே..
வந்தாய்... பேசினாய்...
ரகசியம் கூட சொன்னாய்
என்னிடம்....
அப்போதும்..
இப்போதும்...
என் சந்தோசம் நீ..
சிறகில்லாமல்
சந்தோஷ வானில் பறந்தேன்.
உன் நட்பு வட்டாரம் பெரிது
அதில் ஆச்சரியம் இல்லை
அந்த வட்டத்துக்குள் சதுரமாய் நான்
ஆச்சரியம்...
பெண்ணுக்கே உரிய கடமைகள் ...
அலுவலில் ஏற்படும் பணி சுமை...
குடும்பத்தில் இருக்கும் பொறுப்பு...
என
ஓயாது உழைக்கும் நீ நடுவே
என்னையும் நினைக்கிறாய் அது போதும்.
சந்தோஷமாய் நீ வாழ வேண்டும்
உன் நலன் விரும்பும் - உன் சிநேகிதி.
- Shanthi Balaji
- Shanthi Balaji
No comments:
Post a Comment