Pages

Saturday, 12 January 2013

ஆனந்தம்



நீ தூக்கி வந்த சுமையை 
இறக்காமல் விடாது 
உன் ஆன்மா ....
நீ செய்த வினைகளின் 
பலனை புசிக்காமல் விடாது 
உன் உடல் ...
இன்பம் வரும் போது 
இறுமாப்பு கொள்கிறாய் ...
துன்பம் வரும் போது 
துவண்டு போகிறாய் ...
நீ இருட்டில் பாதை தேடி 
தவிக்கும் போது ...
ஒளியாய் வழி காட்டுபவன் 
இறைவன் .....
அவனை மனதில் இருத்தி 
அமைதியாய் வாழ 
முயற்சி செய் .....
ஆனந்தம் தேடிவரும் 
உன்னை ......

No comments:

Post a Comment