Pages

Thursday 9 May 2013

காப்பாற்ற வருவாய்

காதலா !..உன்னை நான் எப்படி
காணாமல் இருப்பேன்?..
இருதயம் இல்லாத கூட்டத்தின்
இரும்பு பிடியில் நான் ...
பாசம் இருப்பதுபோல்
பாசாங்கு செய்கிறார்கள் ...
பார்க்க கூடாதாம் உன்னை
பார்வை பிறகு எனக்கு எதற்கு ?..
விரல் பதிந்த கைப்பேசி அழுகிறது -என்
விரல்கள் வலுவிழந்ததை கண்டு ...
உறக்கமின்றி நான் தவிப்பது ..
உனக்குமட்டும் தெரியாதா என்ன ?...
காப்பாற்ற வருவாய் நீ ..
காதலை வாழ வைப்பாய்நீ ..
காலமெல்லாம் நம்பிக்கையில் ..
காத்திருக்கும் காதலி .....

1 comment:

  1. விரைவில் நல்லது நடக்கட்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete