Pages

Wednesday 1 May 2013

வலி தீர வழி சொல்


உதட்டளவில்தான் உறவு வைத்தாய் 
உள்ளத்திலிருந்து ஏனோ விலக்கிவைத்தாய் 
உணர்ந்து கொண்ட போதோ !..
உயி ர் அறுந்து வீழ்ந்தேன் ..
பார்க்காதபோது பரிவுடன் இருந்தாய் ..
பார்த்தபின் ஏனோ பரிதவிக்கவிட்டாய் 
பார்த்து எதிர்பார்த்து பாதியானது தேகம் 
பாராமுகமாய் நீ இருப்பதால் 
வலிக்கிறதே என் நெஞ்சம் ..அந்த 
வலிதீர வழி ஒன்றை சொல் ...

3 comments:

  1. விரைவில் வலிக்கு வழி கிடைக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அழகிய கவிதை

    ReplyDelete
  3. விழிகளால் அழைப்பு விடுக்க வேண்டியதுதான்,......
    விழி ஏற்பாய்
    விழி ஏற்பாய்
    வழி மறந்து போனேனே
    வலி சுமந்து நிற்கிறேனே
    விழி ஏற்று பாராய்...
    வலி தீர வழி சொல்லாய்....

    ReplyDelete