Pages

Wednesday 1 May 2013

மகளே !என் அருமை மகளே!


மகளே !என் அருமை மகளே!
மலடி என ஒருவரும் அழைக்காவண்ணம் 
மகளாய் பிறந்தவளே!...
மகிழ்கின்றேன் உன்னில் ...
ஒரு மணி நேர வேதனையை 
ஒரு வினாடியில் மறந்தேன் ...
என்னுள் குடியிருந்த உயிரே ..
என்னை கட்டிக்கொண்டு 
என் கன்னத்தில் நீ இட்ட முத்தம் 
என்றுமே இனிக்குமே திகட்டாது ...
உன் மழலையில் மகிழ்ந்தேன் 
உன் அறிவில் வியந்தேன் 
உன் அன்பில் நனைந்தேன் 
உன் சாதனையில் பெருமிதமடைந்தேன் 
ஒரு சில வரிகளில் முடிந்திடுமோ?
ஒரு தாயின் பாசம் ..
ஒரு யுகம் கடந்து போனாலும் 
ஒரு அற்புதமாய் என்றும் நிற்கும் .

4 comments:

  1. மறக்கவே முடியாது...

    சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அன்னையின் அன்பை
    அழகாக சொல்லியிருக்கிறீர்கள்....

    ReplyDelete