Pages

Thursday 9 May 2013

பேய் என ஆன தாய்

தாயே!நீ ஏன் இப்படி
பேய் என ஆனாய் ?..
தரக்குறைவான வார்த்தைகள் பேசி ..
தரம் குறைந்து நிற்கிறாய் ...
உன்மீது நான் வைத்த நம்பிக்கை
உடைந்து தான் போய்விட்டது ....
காதல் செய்வது என்ன பெரும் பாவமோ ?..
காட்டு மிரண்டியாய் நடந்து கொள்கிறாய் ..
பாசத்தால் நிறைந்த என் மனம் --இன்று
பாரமாகி போனதே தாங்கமுடியவில்லை ..
எதிர் பார்க்கவில்லை தாயே !---நீ
எதிரி போல் என்னை பார்ப்பாய் என்று ..
இரட்டை வேடம் போடும் உன்னை
இப்பவும் மன்னிக்கிறேன் நீ தாய் என்பதால் ..
உண்மையை பேசு --தயவு செய்து
உன் உள்ளத்திலிருந்து பேசு .....



1 comment:

  1. புரிதல் எங்கே உள்ளதென்பது புரியவில்லை...

    ReplyDelete