Pages

Tuesday, 2 April 2013

வீண்


மனநிறைவில்லா வாழ்க்கை
ஞானமில்லா பலம்
கடைபிடிக்காத ஒழுக்கம்
உழைக்காத உணவு
கைமாறு எதிர்பார்த்த உதவி
அடக்கமில்லா படிப்பு
ரசிக்கப்படாத அழகு
காட்டப்படாத அன்பு
பேசப்படாத நல்வார்த்தை
தொடர்பு இல்லாத நட்பு - இவை
எல்லாமே வீண் ...

Tuesday, 26 March 2013

காதலி என்னை காதலி


வானம் என் கைக்கு எட்டும்
தூரம் வந்து விடும் ..
வெற்றியோ என் வாசலில்
காத்துகிடக்கும் ..
உலகமே என் காலடியில்
வீழ்ந்து கிடக்கும் ..
ஏணியே இல்லாமல் உயரம்
எனக்கு எட்டிவிடும் ..
ஐயோ !..நீ மட்டும் என் காதலை
ஏற்று கொண்டுவிட்டால் ....


காயவடு மறைய வில்லையே ...


தண்ணீரில் ஓடம் போகும் -என்

கண்ணீரில் ஓடம் போகுமோ ?..
காட்டாற்று வெள்ளத்தில் எல்லாம்
காணாமல் போகும் ..
காதல் பெருவெள்ளத்தில் -நான்
காணாமல் போனேனே ...
காதலை மட்டுமே நான் தந்தேன்
காயங்கள் மட்டுமே நீ தந்தாய் ...
காய்ந்து போனாலும் என்
காயவடு மறையவில்லையே ...

புரிகிறதா கொஞ்சம்


உன்னிடம் மயங்குகிறேன் 
உண்மையைத்தான் சொல்லுகிறேன் 
உயிரற்ற உடம்பாய் இருந்தேன் 
உயிரை ஊற்றினாய் என்னுள் ..
உரிமையாக்கிக்கொள்ள துடிக்கும் நெஞ்சம் 
உனக்கு அது புரிகிறதா கொஞ்சம் .



Monday, 18 March 2013

காத்திடு என் இறைவா !..


ஏக்கமும் ஏமாற்றமும் 
போதுமே ..என் இறைவா ...
என்னுள் செத்துவிட நான் விரும்பவில்லை 
சுவாசத்தை கொடுத்துவிடு என் இறைவா ..
அவளுக்குள் மூழ்கிட நான் விரும்பவில்லை 
மேலே தூக்கிவிடு என் இறைவா ...
நான் பிழைத்தால் உன்னால் தான் என் இறைவா ..
இனி ஒரு முறை ஏமாறாமல் காத்திடு என் இறைவா ...

எப்படி உரைப்பேன் என் அன்பை ?...


ஒரு நிமிடம் நீ பேசினால் ..
பறப்பேன் வானில் ..
இது ஏன் உனக்கு தெரியவில்லை ?..
என் இதயமொழி உனக்கு புரிகிறதா ?..
புரிந்துகொண்டு தான் நடிக்கிறாயா ?..
கனவில் வருவாய் என ..
தூக்கம் விழிக்காமல் காத்திருக்கிறேன் .
கனத்த மனதிற்கு ஆறுதல் 
உன் வார்த்தையில் ...
மனதோடு பேச வா அன்பே ...
வேறு எப்படித்தான் உரைப்பேன் 
என் அன்பை ...

ஏன் உணரமுடியவில்லை ?


என்ன நான் இன்னும் 
ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமோ ?..
உன்னுடன் பேச ...
உன்னை நான் அப்படியே ..
மறந்துவிட முடியாதே !...
உன் கண்ணசைவு எனக்கு புரிகிறது 
என் இதய துடிப்பை உன்னால் 
ஏன் உணரமுடியவில்லை ?....