மனநிறைவில்லா வாழ்க்கை
ஞானமில்லா பலம்
கடைபிடிக்காத ஒழுக்கம்
உழைக்காத உணவு
கைமாறு எதிர்பார்த்த உதவி
அடக்கமில்லா படிப்பு
ரசிக்கப்படாத அழகு
காட்டப்படாத அன்பு
பேசப்படாத நல்வார்த்தை
தொடர்பு இல்லாத நட்பு - இவை
எல்லாமே வீண் ...
வானம் என் கைக்கு எட்டும்
தூரம் வந்து விடும் ..
வெற்றியோ என் வாசலில்
காத்துகிடக்கும் ..
உலகமே என் காலடியில்
வீழ்ந்து கிடக்கும் ..
ஏணியே இல்லாமல் உயரம்
எனக்கு எட்டிவிடும் ..
ஐயோ !..நீ மட்டும் என் காதலை
ஏற்று கொண்டுவிட்டால் ....
கண்ணீரில் ஓடம் போகுமோ ?..
காட்டாற்று வெள்ளத்தில் எல்லாம்
காணாமல் போகும் ..
காதல் பெருவெள்ளத்தில் -நான்
காணாமல் போனேனே ...
காதலை மட்டுமே நான் தந்தேன்
காயங்கள் மட்டுமே நீ தந்தாய் ...
காய்ந்து போனாலும் என்
காயவடு மறையவில்லையே ...