தாயே ! ...
எங்கு தான் போனாய் !...
என்னை தனியே
தவிக்க விட்டு ;
தெரிந்தே என்னை
தெருவில் விட்டாயோ ?...
ஏதோ ஒரு கயவனை நம்பி
மோசம் போனாயோ ?...
விருப்பமே இல்லாமல்
என்னை ஈன்றாயோ ?...
தவறி உன் வயிற்றில்
பிறந்தேன் என்று
தண்டனை தந்தாயோ ?...
மண்ணில் நான் விழும் முன்னே - நீ
விண்ணுலகம் சென்றாயோ ?...
தெரிந்தே என்னை
தவற விட்டாயோ ?...
உனக்கு தெரியாமலேயே
தவற விட பட்டேனோ ?...
நீ இரக்கமுள்ளவளோ , இரக்கமற்றவளோ ;
அது தெரியாத எனக்கு ,
ஒரு பேராசை மட்டும் உண்டு.
என்றோ ,
ஒரு நாள்
உன்னை சந்திப்பேன்
என் மகன் நீயென - நீ
புகழும்படி உயர்வேன்
என் கனவு நனவாகுமா தாயே ?...
- சாந்தி பாலாஜி
எங்கு தான் போனாய் !...
என்னை தனியே
தவிக்க விட்டு ;
தெரிந்தே என்னை
தெருவில் விட்டாயோ ?...
ஏதோ ஒரு கயவனை நம்பி
மோசம் போனாயோ ?...
விருப்பமே இல்லாமல்
என்னை ஈன்றாயோ ?...
தவறி உன் வயிற்றில்
பிறந்தேன் என்று
தண்டனை தந்தாயோ ?...
மண்ணில் நான் விழும் முன்னே - நீ
விண்ணுலகம் சென்றாயோ ?...
தெரிந்தே என்னை
தவற விட்டாயோ ?...
உனக்கு தெரியாமலேயே
தவற விட பட்டேனோ ?...
நீ இரக்கமுள்ளவளோ , இரக்கமற்றவளோ ;
அது தெரியாத எனக்கு ,
ஒரு பேராசை மட்டும் உண்டு.
என்றோ ,
ஒரு நாள்
உன்னை சந்திப்பேன்
என் மகன் நீயென - நீ
புகழும்படி உயர்வேன்
என் கனவு நனவாகுமா தாயே ?...
- சாந்தி பாலாஜி
No comments:
Post a Comment